சங்கீத பேய்

டயர்களில் சங்கமிக்கும்
சங்கீத பேயொன்று
காதருகே கானமழையொன்று
பொலிந்ததே..
இசையில் நனைய
உதிரத்தில் தானும் நனைந்ததே
கபடநாடகம் நடாத்தி
காரியத்தில் தானும் வென்றதே..
ஆஸ்பத்திரியில்
நானும் அவதியுற
ஆத்மத்திருப்தியில்
தானும் பறந்ததே..