நைந்த நூல்கயிரு

ஒன்றின்பின் ஒன்றாக உலர்த்தப்பட்ட உண்மைகளை உறிஞ்சி.... நைந்தது நூற்கயிறு ......

ஈரத்தில் காளானும் பாரமூட்ட ,,,நீர்க்ககாமல் வளைந்தது சிறுகயிறு...

காற்றின் அசைவில் ,

அகாலமாய் அறுந்து பிளவ...

வீழ்ச்சியின் விசாரிப்பில் ...கண்பொத்தி,,

காரணம் களைய ...

ஆள்காட்டிகளின் அடையாளங்களில்

கறைபட்டது ..

களங்கமில்லாக் காற்று !!


மறைத்து மடிக்கப்பட்டது .. ...

ஈரிப்பில் கனத்த உலராத உண்மைகள் ....

சிலுவையில்,,,, காற்றின் சன்னக் குரல் செவிகளில் அறைவதில்லை....
அறுந்தக் கயிறின் அலைவரிசைக்கு மட்டுமே அது அகப்படுமாக.....

எழுதியவர் : இந்து (17-Jan-14, 9:49 pm)
பார்வை : 182

மேலே