சொல்ல விடு

ஊருமறியும் என்காதல்
உன்னிடம் வந்தால்மட்டும்
ஊமையாகும் வாய்மொழிகள்- சமயத்தில்
ஊனமுமாகும் காதல்மொழிகள்!

தயக்கங்கள் தழுவிக்கொள்ள
பதற்றங்கள் பற்றிக்கொள்ள
சட்டைப்பைக்குள் ஒளித்துகொண்டேன்
என் வார்த்தைகளை!!!

அச்சங்கள் உச்சியைதொட
கூச்சங்கள் மிச்சத்தைதொட
கைக்குட்டைக்குள் மறைத்துக்கொண்டேன்
காதல் கடிதங்களை!!!

தடைகள் அனைத்திற்கும்
கம்பளி போர்த்திவிட்டேன்
மீண்டும் எழுமுன்
மனதைப் பேசவிடு.

எத்துனை நாட்கள்தான்
மனதிற்குள்ளேயே முணுமுணுப்பேன்
இம்முறையேனும் சொல்லிவிடுகிறேன்
இருவிழிகளைமட்டும் இமைக்காதிரு.

சத்தமாக உன்முன்
உரைத்திட வேண்டும் -பெண்ணே!
என்னுள் நீ வந்துவிட்டாய் என்று!!
என்னை நீ வதம்செய்கிறாய் என்று!!!

எழுதியவர் : சுமி (19-Jan-14, 10:39 pm)
பார்வை : 123

மேலே