நீ இல்லாமல் இருக்கையிலே
கவிதை விருந்தொன்றை கொடுக்க
உன் கடை கண் பார்வை
பார்த்திருந்தேன்!
வழிதனில் மலர்களை அனுப்பி
உன் வருகையை
வசந்தமாக்கிடுவேன்
பசும்புல்லில் பனித்துளி தூவி
இயற்கை தரை மீது தருகின்ற சுவர்க்கம்
நீ இருந்தால் தான் இனிக்கும்!
வான் மீது தவழ்கின்ற முகிலும்
முகில் மீது தவழ்கின்ற நிலவும்
பார்த்திட அழகென்ன சொல்லு
நீ இல்லாமல் இருக்கையிலே!
நதி மீது துள்ளும் மீன்கள்
கரை மீது தவழ்கின்ற அலைகள்
மலர் மீது தவழ்கின்ற வண்டும்
பார்க்க மனம் இல்லை எனக்கு
நீ இல்லாமல் இருக்கையிலே!
இயற்கை தரும் அழகையெல்லாம்
ரசிக்க மனம் இல்லாமல்
உன் நினைவை மட்டுமே ரசிக்கின்றேன்!
உள்ளத்தை கவிதையிலே வரைந்துவிட்டேன்
சிறகாக மாறினால்
மனம் பறவை தனை தோற்கடிக்கும்