காதலின் ஏக்கம்

காதல் : 
நான் உன்னை கண்டவேலையில்
மனதில் ஒரு ஏக்கம் , 

உன் புன்னகை பார்த்த அந்த நொடி
பூவே உன்மீது ஒரு ஏக்கம், 

உன் ஓரப்பார்வை பெண்ணே அதிலே 
எனக்கொரு தாக்கம், 

நீ கண் சிமிட்டும் அந்த நொடி உயிரே
என் இதயத்தில் ஒரு ஏக்கம், 

நீ பேசிய வேளையிலே என் மனதால் 
அன்பே ஒரு ஏக்கம், 

உன் கரம் பிடிக்க துடிக்கும் என் அன்பு
எனக்கொரு ஏக்கம், 

என் ஏக்கங்கள் உணர்த்தியது நான் 
உன்மீது கொண்ட காதலை, 

தினம் தினம் ஏங்குகிறேன் அன்பே நீ 
என்னை காதல் கொள்வாயென, 

உன் கரம்பிடித்து நம் முகம் பதித்து என் சுவாசம்
உன் சுவாசமாகி நம் இதயம் ஒன்றோடு
ஒன்று சேரும் நேரம் என் ஏக்கங்கள் கலைந்து
நம் உயிர் ஒன்றாகும் ,...!!! 

அன்பே நான் நம் காதலெனும் படகில் அன்பெனும் துடுப்போடு பயணிக்கிறேன் ......சேர்ந்தால் கரை உன்னோடு...,இல்லையென்றால் 
கல்லறை மண்ணோடு..!!! 

-நம் காதலோடு என்னுள் நீ ,உன்னுள்
நான் ♡பார்தீ♡

எழுதியவர் : பார்த்தீபன் (22-Jan-14, 3:04 pm)
பார்வை : 816

மேலே