பெண் படைப்பாளிகளின் தொகுப்பு

தோழமை நெஞ்சத்தீர் வணக்கம்

தளத்தின் கவிதைக்கென்று யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும் எனும் ஒரு தொகுப்பு முதலில் வெளிவந்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றது.

இரண்டாவது தொகுப்பு வெளியிட தயாராக உள்ளது.

மூன்றாவது தொகுப்பு முழுக்க முழுக்க பெண்களால் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்தொகுப்புக்கென தோழர்கள் ஷியாமளா, உமா மகேஷ்வரி, புனிதா, கவியாழினி, நாகினி, ஆவாரம்பூ, தாரகை, புலமி, சாந்தி ,சுதா ,கோமு என பெண்மணிகள் படைப்புகளை அளித்துள்ளனர். பாராட்டுகிறோம்.


தோழமை நெஞ்சங்களுக்கு ஓர் வேண்டுகோள் கீழே அளிக்கப்பட்டுள்ள தலைப்புகளுள் மூன்றினை முதல் இரண்டு மூன்று என தெரிவு செய்து தங்கள் கருத்துப்பகுதியில் அளித்திட வேண்டுகிறோம். ஒரு நூலின் தலைப்பைக்கூட படைப்பாளிகளே தெரிவு செய்தல் வேண்டும் என்பதே சிறந்தது என்பதால் இந்த ஏற்பாடு. இத்தலைப்பு பெண் படைப்பாளிகளின் தொகுப்புக்கு உரியது என அறிக...

1.செவ்வாய் கிரகம் பாவந்தான்
2.கண்ணீர் எழுதும் மறு ஜென்ம சாசனம்
3.புதைக்க ஓர் இடம் தேடி
4.எனக்கென்று ஒரு முகம் இல்லை
5.ஒரு மன்னிப்பாவது கேளேன்
6.சதை விற்கும் பெண்ணா உன் மனைவி
7.சுமையில்லா வாழ்வில் சுகமில்லை
8.முப்பொழுதும் உன் கற்பனையில்
9.புத்தெழுச்சியாய் மீட்பாய் விடை
10.நோட்டம் விட்டே கூட்டை மெலிக்காதீர்
11.முடிவிலி நீட்டங்கள்
12.மனித அன்னங்கள்

விரைவு விழைவு
பெருகும் அன்புடன்
அகன்

பெருகும் அன்புடன்
அகன்

எழுதியவர் : அகன் (25-Jan-14, 7:42 am)
சேர்த்தது : agan
பார்வை : 179

மேலே