கடிதம்
காற்றே உனக்கொரு
கடிதம்!
காதலில் இதுவொரு
புதுவிதம்!
காற்றே நீ கொஞ்சம்
தென்றலாய் வீசு
என்னவள் இதமாய்
தூங்கிடவே!
வெட்கையாக இருக்கும்போது
வீசாமல் இருந்துவிடாதே!
என்னவளின் சக்தியெல்லாம்
வியர்வையிலே பறிபோகும்!
கடுமையாய் வீசி
புயலாகிவிடாதே,
என்னவள் சினங்கொண்டால்
உன்னையும் தோற்கடிப்பாள்!