3 இஞ்சினியர்

ஒரு முக்கியமான் பொது கூட்டதுக்காக 3 வக்கீல்களும், 3 இஞ்சினியர்களும் ரயிலில் பயணம் செய்தார்கள், வக்கீல்கள் தங்களுக்கான பயணச்சீட்டு வாங்கியிருந்தார்கள், இஞ்சினியர்களோ மூவருக்கும் சேர்த்து ஒரே பயணச்சீட்டுதான் வைத்திருந்தார்கள், இவர்கள் எப்படி ஒரே பயணச்சீட்டில் மூவரும் பயணிக்க போகிறார்கள் என்பது வக்கீல்களுக்கு வியப்பாகவே இருந்தது..

ரயிலில் ஏறியவுடன் மூவரும் கழிவறைக்குள் சென்று கதவைசாத்திக் கொண்டனர்.. டீ.டீயார் வந்து கழிவறை கதவைத்தட்டினார், கதவை லேசாக திறந்து ஒருவர் சீட்டை நீட்டி...னார், சரிபார்த்து விட்டு டீ.டீயார் சென்றுவிட்டார், இதைப் பார்த்த வக்கீல்கள் தங்களுக்கு ஏன் இந்த யோச்னை தோன்றவில்லை என்று மனதுக்குள் புழுங்கிக் கொண்டனர்..

கூட்டமும் முடிந்து திறும்புகயில், வக்கீல்கள் ஒரே பயணச்சீட்டு வாங்கினார்கள், இஞ்சுனியர்களோ எதுவும் வாங்கவில்லை, ஒரு வக்கீல் கேட்டார் எப்படி பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பீர் என்று, பாருங்கள் என்றனர் இஞ்சினியர்கள்..

ரயிலில் ஏறியவுடன் வக்கீல்கள் கழிவறைக்குள் சென்று கதவைதாழிட்டுக் கொண்டனர்..

சிறிது நேரம் கழித்து கதவுதட்டப்பட்டது..

கதவை லேசாக திறந்து வக்கீல்களில் ஒரு கரம் சீட்டை நீட்டியது.. சீட்டை பெற்றுக் கொண்ட இஞ்சினியர்கள் மறுகழிப்பறையில் நுழைந்து கதவை தாழிட்டுக் கொண்டனர்..

எழுதியவர் : (4-Feb-14, 4:26 pm)
பார்வை : 226

சிறந்த நகைச்சுவைகள்

மேலே