தமிழ் நாடு

தகை கொண்டோர் உறங்குவதால்
தமிழ் நாடே உறங்குவதா ?
பகை கொண்டோர் நிலையாலே
பதறும் நாடாய் போனதுவோ ?
வீரம் கொண்டு விளைந்தவனே
பேரம் பேசி புதைகின்றாயோ ?
பாரதி பூமி பட்டுப்போனதோ ?
சாரதி எங்கே நீதி ஓத ?
நற்றவத்தால் நனிசிறந்த நாடே
பெற்ற தவம்போல் பேணிக் காப்போம் !
மறத்தமிழர் மதிகொண்டு எழுந்தால்
அறத்தமிழ் நாடாய் வாழுமன்றோ !!


சரோ

எழுதியவர் : சரோ (13-Feb-14, 12:06 pm)
பார்வை : 198

மேலே