நில் கவனி காதலி

சாதல்வரும் நாள்அறி யாத-கூட்டம்
காதலர்க்கு தினம் கொண்டாடும் - இங்கே
சோதனையே முள்ளென்று சாதனையை பூவென்று ராணிக்குத்தான் தருவர்
ராஜா - சின்ன - ரோஜா!
பெற்றவர் சொல் கேட்பதுவுமில்லை-காதல்
பெரியோரை மதிப்பதுவும் இல்லை- இங்கே
கற்றதனால் ஆய பயனுமில்லைத் தோழா காதல் ஒருமாதிரி
போதை -மாறும்- பாதை!
பார்க்,பீச் காலம் மாறிப்போச்சு- இப்போ
பார்,பப்பால் காதல் கெட்டுப்போச்சு-இவன்
பேருக்குகாதலிச்சு பின்னோர்நாள் கைபிட்டுப்போவானே எல்லாம்'டைம்
பாசு'- ஆவாய்நீ - லூசு!
கன்னி-இயலில் கண்ணியம்தான் காதல்- இனக்
கவர்ச்சியால் வருவதல்ல காதல் - நெஞ்சம்
புண்பட்டுப் போகாதே!புகைவிட்டுச் சாகாதே அதுவல்ல நீகொள்ளும்
நேசம்-சுத்த-மோசம்!
கண்ணடிச்சா சத்தம் கூடஇல்லை- பிறகு
காதல் மட்டும் வந்திடுமா?இல்லை!- வயது
எண்ணிரண்டு கழிந்தப்பின் பக்குவங்கள் கண்டப்பின்னே காதல்
கொள்க-வாழ்வை-வெல்க!
நானில்லை காதலுக்கு எதிரி-நண்பா
நான்தருவேன் இதைஉனக்கு எழுதி! -இங்கே
ஏனில்லை உதவி என்போர்க்கு நண்பர்கை தான்உதவி செய்யு
தப்பா!-இது -தப்பா?
( 2014 காதலர் தினம் அன்று எழுதியது )