நகைச்சுவை 068

கணவன் சோபாவில் அமர்ந்து சுவாரஸ்யமாக நாளேட்டை படித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது சமையல் அறையில் இருந்து வெளிவந்த மனைவி, கையில் இருந்த சப்பாத்தி இடும் கட்டையால் அவன் மண்டையில் "டங்" ன்னு ஒரு போடு போட்டாள். திடுக்கிட்ட கணவன், ஏனடி என்றான். அதற்கு மனைவி, இன்று காலை உங்கள் சட்டைப்பையில் இருந்து ஒரு சிறு துண்டு காகிதம் கிடைத்தது. அதில் ராணி என்று எழுதப்பட்டிருந்தது. யார் அந்த ராணி. சொல்லுங்கள் என்றாள். வலிக்கும் தலையை தடவிக்கொண்டே, ஓ .. அதுவா .. போன வாரம் நான் பணம் கட்டிய குதிரையின் பெயர் அது என்றான். அதை நம்பிய மனைவி, மன்னிப்பு கோரிக் கொண்டாள். மற்றொரு நாளும் அதுபோல் செய்தாள். வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல், என்ன ஆச்சு உனக்கு என்று கொஞ்சம் குரல் உயர்த்திக் கேட்டான். ஓ .. அந்தக் குதிரை இப்பத்தான், நீங்கள் எங்கே என்று ஃ போனில் கேட்டது என்று சொல்லவும், கணவன் எழுந்து ஓடிவிட்டான்.

எழுதியவர் : (14-Feb-14, 7:25 pm)
பார்வை : 152

மேலே