கோழிக்குஞ்சுகள

பையன் 4 கலர் கோழிக்குஞ்சு வாங்கி வளர்த்தான் , அது கொஞ்சம் பெரிசான உடன் ரொம்ப விய்யா, விய்யானு கத்திக்கிட்டே இருந்துச்சு ,

" செல்லம் கோழிக்குஞ்சுகள யார்கிட்டையாவது கொடுத்திரளாம்"

" அதெல்லாம் முடியாது , நான்தான் வளர்ப்பேன் "

" இல்ல செல்லம் எப்போ பார்த்தாலும் ரொம்ப கத்திகிட்டே இருக்குடா"

" தங்கச்சி பாப்பாவும் எப்போ பார்த்தாலும் கத்திக்கிட்டு அழுதுக்கிட்டே தான் இருக்கு , அப்போ தங்கச்சி பாப்பாவையும் யார் கிட்டையாவது தூக்கி குடுத்திரலாமா
??? "

எழுதியவர் : முரளிதரன் (15-Feb-14, 10:14 am)
பார்வை : 177

மேலே