இதயம் கிழிக்கும் இதழ்கள் - மணியன்

சிதைந்த போன
என்
இதயம் அறியுமா . . .
கிழித்தது மலர் தான் என்று. . . . .

*******

அழுது சிவந்த
என்
கண்கள் அறியுமா. . .
கலக்கியது உன் கண்கள் என்று . . .

*******

நடந்து பழகிய
என்
நடை தொடருமா. . .
நிழல் நீயின்றி தொடரும் வழி. . .

*******

கேட்டுப் பெற்ற
என்
செவி உணருமா. . .
கேவி அழுதும் கிடைக்காது என்று. . . .

*******

பாடிப் பறந்த
என்
சிறகு விரியுமா. . .
வாடிப் போன என் காதல் கண்டு. . . . .

* - * - * - * - * - * - * - *

எழுதியவர் : மல்லி மணியன் (20-Feb-14, 7:19 pm)
பார்வை : 826

மேலே