என் மகளாகப் பிறப்பாய் அம்மா - மணியன்

பாய் விரித்த படுக்கையில்
நோய் விரித்துப் படுத்திருந்தாள்.
பத்து மாதம் கருச்சுமந்த
பாசமிகு என் தாய். . . . .
*******
எனக்கான உயிர் கொடுத்தாள்
தனக்காக எதை எடுத்தாள்
பொழிந்திட்ட அன்பு மட்டும்
போர்வையாய் போர்த்திக் கொண்டாள். . . .
*******
தாலாட்டி எனை வளர்த்தாள்
பாலூற்றக் காத்து இருந்தாள்
கிண்ணம் கொண்டு அமுதூட்ட
எண்ணம் எனக்கு இல்லையம்மா . . . .
*******
மார் முட்டி அருந்தியதை
உயிர் விரட்ட கொடுப்பதுவோ
பார் முழுதும் இப்பழக்கம்
பழக வைத்தப் பாவியரே. . . .
*******
துடியாய்த் துடி துடித்தாள்
முடியாமல் நான் அழுது
தெரியாமல் திகைக் கின்றேன்
தேவை என்ன நானறியேன். . . .
*******
பெண்கள் குல மங்கையவள்
கண்ணால் எனைத் துலாவுகின்றாள்
என்னைக் கண்டு மேதுபயன்
பின்னர் நான் தீவைக்கவோ. . . .
*******
கதை சொல்லி வளர்த்தவளே
சிதை யினிலேச் சாம்பலாக
அதைக் காணும் என்மனமும்
பதை பதைத்து ஓலமிட. . . . .
*******
கணக்காக உயிர் பிரித்து
காலன் உன்னைக் களவாட
கன்றும் நான் மீண்டுமுந்தன்
கருவறை உள் புகுவேன். . . . . . .
*******
என்று நான் தீர்ப்பதம்மா
எனக்கு நீயளித்த கடன்
ஏதேனும் ஓர் பிறவியேனும்
என் மகளாய்ப் பிறப்பாயம்மா. . . . . . .
*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*