என் காதல் கதை பகுதி 2

முதல் ஈர்ப்பு பிறந்தது என்னில்
காதல் என்று உணரா வயதில்
காதல் வாழ்வில் சுகம்
காதல் மட்டுமா வாழ்வில் சுகம்

ஒரு மௌன ராகம்
எனக்குமட்டுமான ஒரு மழை
தனிமையில் பேசி திரிவதும்
சுகமாய் காதல் அறியாமலே

ஒரு தலை காதல்தான்
அவளிடம் சொல்லாமல்
அவளை ரசித்தேன்
அவளின் நிழலாய் அவளறியாமல்

சொல்லிட ஒரு தயக்கம்
சொல்லாத வலி கூட ஒரு மயக்கம்
அவள் மறுத்தால் ....என நடுக்கம்
அதுதான் என்னை தடுக்கும் ..........



இன்னும் தொடரும் என் காதல் கதை ....

எழுதியவர் : ருத்ரன் (24-Feb-14, 6:24 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 64

மேலே