நாட்டு புற நய்யாண்டி

வட்ட வட்ட கண்ணம்மா
நிலா போட்ட சட்டம்மா
வருத்த மீனாபோல நீ
இருப்பது தான் நியாமா!

சொக்கு சொக்கு சுந்தரி
சுத்தி வந்து எந்திரி
கத்திரிபூ போல நீ
கிருகிருப்பது ஏனடி!

பத்து பத்து பத்மினி
பக்குவமா வந்து நீ
பார்த்துபுட்டு போனாரே
வெத்தல பாக்கு மாத்திக்க!

குத்து குத்து கும்மாகுத்து
கெட்டிமேளம் கொட்டட்டும்
மணபந்தல் நிறையட்டும்
மப்பிள்ள தாலி கட்டட்டும்!

திருமணமும் முடிஞ்சது
இருமனுமும் இணைஞ்சது
குடுபத்துல குதூகலம்
விருப்பம் போல நடந்தது

பக்கிரி பக்கிரி ராமையா
பந்தியில குந்தையா
பாயசத்த குடிச்சுபுட்டு
ஆயாசம தூங்கய்யா !!

எழுதியவர் : கனகரத்தினம் (25-Feb-14, 4:16 pm)
பார்வை : 286

மேலே