வானதிக்கு பிறந்த நாள்

இன்று பிறந்தநாள்
ஒரு மலர் மலர்ந்தநாள்
என் பாசமலரின் பிறந்தநாள்.
இதயம் நிறைந்த அன்பை
மை நிரப்பிட்ட எழுதுகோலால்
எப்படி சொல்லிட முடியும்.
பலநூறு கவிதைகள்
படைத்தாலும்
தங்கையே ! உன் அன்பிற்கு
எதுவும் ஈடாகாது..!
வாழ்த்திட எழுதிட வேண்டுமே..! -உனை
வாழ்த்தி எழுதாமல்
நான் போனாலும்
என் பேனா
என்னை விடப்போவதில்லை..!
இதோ..! உனக்காக..
ஒரு வாழ்த்து..!
என் அன்பு
வானத்தின் நட்சத்திரமே..!
வானதி தங்கையே...!
வாகை சூடி சரித்திரம் படைத்திடு.!
வானம் தொடும் புகழ் அடைந்திடு.!
வாழ்வில் நிம்மதி தஞ்சம் அடையட்டும்
வாழம் வாழ்வில் உறுதி நெஞ்சம் இருக்கட்டும்.
வாழ்வில் வசந்தம் வீசட்டும்...! -நிம்மதியான
வாழ்க்கையின் எல்லா செல்வமும் பெற்று
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.!
என் இனிய தங்கையே..!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
பொங்கி வரும் சந்தோஷத்துடன் ..
உன் அண்ணன்
-இரா.சந்தோஷ் குமார்.