ஐந்து விரல்களும் பூதமடி

ஐந்துக்கு நாலு சந்தடி!
பஞ்சபூதமாய் உன் கையில் ஜொலிக்குமடி!

வெற்றியில் காட்டும் கட்டை விரலடி!
ஆகாயத்தை சுட்டி காட்டுதடி...!!

அடுத்தவர் குறை சொல்லிடும் ஆள்காட்டி விரலடி!
சூரியனாய் உனையே சுடுமடி...!!

பக்கத்தில் நின்றே அடுத்த விரலடி!
மூச்சுகாற்றாய் துடிக்குமடி...!!

மோதிரம் மாட்டிட தான்
நீர் விரலை நீட்டுமடி...!

எத்தனை சிக்கலையும் நீ தம்பிடிக்க
சுண்டுவிரல் பூமியை பார்க்குமடி!!

பஞ்சத்தை போக்கிட பசியாற நினைக்கின்றோம்!
கையால் நீ உண்டால் பஞ்சபூதமும் பசியாறுமடி!!

பஞ்சி பஞ்சு பிஞ்சு உன் கையடி -என் நெஞ்சினில்
விழுந்தால் உலகை மறந்து உறங்கிட வேண்டுமடி!

இருகை போனாலும் என் மனம்
நம்பிக்கையில் வாழுமடி...!!

ஐந்தையும் அடக்கி விட்டால்
புது சக்தியும் பிறக்குமடி...!!

நவகிரகமும் நமக்குள் அடக்கமடி!
எந்த கிரகம் பிடிச்சி வாட்டுமடி...!!

இத்தனை நம்பிக்கை எனக்குள்
நீ இருக்கும் வரை சோகமென்பதேதடி!!

எழுதியவர் : கனகரத்தினம் (28-Feb-14, 10:44 am)
பார்வை : 157

மேலே