ஒரு நாள் உலகமே தனிமையில் - மணியன்

ஒரு நாள் உலகமே
தனிமையில்
உழன்று சுழன்றிடும்
வெறுமையில். . . . . .
**********

இனமெனும் உறவினை
மறந்தனையே
ஈகைத் திறனும்
துறந்தனையே. . . . . .
**********

அணுவினைப் பிளந்து
ஆற்றல் கண்டாய்
மனிதம் மறந்து
ஆட்டம் கொண்டாய். . . . .
**********

துயிலிலும் துன்பம்
தேடுகின்றாய்
தூக்கம் தொலைத்துக்
கண் மூடுகின்றாய். . . . . . .
**********

வரவிலும் செலவிலும்
சரி பாதி.
வாழ்ந்த பின் உனக்கு
எது மீதி. . . . . . .
**********

பகைமையில் படர்ந்து
ஊறுகின்றாய்
திறமையை வளர்க்க
நாணுகின்றாய். . . . . . .
**********

இருப்பதை பிரித்து
உண்ணும் குணம்
இனி காக்கைக்கும்
நீயும் கற்றுக் கொடு. . . . . . .
**********

வகையாய்ப் பொருளும்
இல்லை என்றால்
வாய்ச்சொல் மலர்ந்து
வாழ்த்து கொடு. . . . . . . .
**********

சேரும் இடம் அறிந்து
தேர்ந்து எடு.
ஊரும் உனைப் புகழ
வாழ்ந்து விடு. . . . . . .
**********

அறியாமை முகிலை
அகற்றி விடு.
அழகிய நிலவாய்
ஒளிர்ந்து விடு . . . . . . . . . . .


*-*-*-*-* *-*-*-*-* *-*-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (1-Mar-14, 4:44 pm)
பார்வை : 102

சிறந்த கவிதைகள்

மேலே