பட்டம்
புத்தகப்பை சுமந்தபடி
உன் புன்னகை தெரியுதடி;
சீருடைக்குள் ஒளிந்தபடி
உன் மதிமுகம் தெரியுதடி;
பால் நிலா பேசியபடி
பள்ளி செல்ல துடிக்குதடி;
உன் பாவை முகம் பார்த்தபடி
சொர்கமே என் கண்முன் வந்ததடி.
பாடம் நீ படித்தபடி இருக்கையிலே
தேன் அருவி என் காதில் பாயுதடி;
பட்டம் நீ வாங்கும் அழகை
பார்க்க காத்துருப்பேனடி ..............