தண்ணீர் தண்ணீர் தண்ணீர்

தண்ணீர் தண்ணீர் தண்ணீர் !
தண்ணீரின்றி கண்ணீர்.
கண்ணீர் கண்ணீர் கண்ணீர் !
கண்ணீர் கூட தண்ணீர்.

தோண்ட, தோண்ட சுரந்திடுமே,
குடிக்க, குடிக்க இனித்திடுமே.
பூமிக்கடியில் பிறந்திடுமே,
உயிர்கள் வாழ உதவிடுமே.

தண்ணீரின்றி வாழ்வா-அது
சாத்தியமில்லையாட.
தண்ணீரின்றி போனால்,
உலகம் சமாதியாகுமடா.

பூமிக்கடியில் எங்கும்
புதைந்துகிடக்கும் தங்கம்,
தோண்ட, தோண்ட பொங்கும்,
தண்ணீரே! வாழ்வின் அங்கம்...

எழுதியவர் : அகத்தியா (5-Mar-14, 12:14 pm)
பார்வை : 164

மேலே