நானும் அகதியாய்

வசந்த காலங்கள்
விடை பெறுகின்றன...

இலையுதிர் காலம் வருகைக்காக..
இனியும் தாமதமில்லை...

என் பறவைகள்
கண்டம் விட்டு கண்டம்
தாண்ட தொடங்கிவிட்டன...

நானும் மாறியாக வேண்டும்.....
பெயர் தெரியாத அந்த
பறவை மரக்கொத்தியாய்
மனதை கொத்தி பறந்து சென்றது...

கால் தடங்களை தேடி....
நானும் அகதியாய்...

எழுதியவர் : கவிதை தாகம் (5-Mar-14, 2:10 pm)
சேர்த்தது : தசரதன்
Tanglish : naanum agadhiyaay
பார்வை : 74

மேலே