அந்தக் கதை

அடைமழை வேளையில்
தவறவிடப்பட்டுள்ள
குடையதில் இருக்கிறது,
நடந்து செல்லும் ஒரு
காதல் கதை..

நடந்து வருகிறாள் காதலி
நனைந்து மழையிலென்று,
பிடித்திருந்த குடையைப்
போட்டுவிட்டு அவளுடன்
நடந்து போகிறானாம் நனைந்து...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Mar-14, 7:21 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : andhak kathai
பார்வை : 40

மேலே