காதல் கவிதை

மழைக்கு
காத்திருக்கும் உழவனாக....!!
மரணத்திற்கு தவம்
கிடக்கும் கிழவனாக....!!
அலை தொட கரையில்
...
காத்திருக்கும் பாதங்களாக...!!

நிலவை உரசும் மேகமாய்
உன் நினைவை உரசி
சென்றிடும் சோகங்களாய் ....!!
பூத்திருக்கும் பூவின் மேல்
காத்திருக்கும் வண்டுகளாக..!!
காற்றினில் மணம் பரப்ப
காத்திருக்கும் செண்டுகளாக..!!

மலைக்குன்றுகளின் தாகம் தீர்க்க
காத்திருக்கும் அருவிகளாக...!!
ஆதவன் வர இரைதேட
செல்ல காத்திருக்கும்குருவிகளாக...!
தாய் மடி பிடித்து பால் குடிக்க
காத்திருக்கும் கன்றுகளாக..!

இப்படியெல்லாம் எனது
காத்திருப்புகளும் தொடர்கிறது.....!!
மாதுவே நீ புறா முலம்
அனுப்பும் ஒற்றை தூதிற்காக...!!

படித்து படித்து மடித்து வைக்கப்பட்ட
கடிதங்களை எல்லாம் கவிதை வரிகளாய்
மொழி பெயர்த்து மனபெட்டியினுள்
அடுக்கி வைத்துள்ளேன்
என்றும் அழியா பொக்கிஷமாய் ....!!

உன்னின் கற்பனை காதலன்.....

எழுதியவர் : kannan sha (5-Mar-14, 8:12 pm)
சேர்த்தது : nagaskannan
Tanglish : kaadhal kavithai
பார்வை : 55

மேலே