நோக்கியா

மாணவி: சார் இவன் என்னக் கிண்டல் பண்ணி பாட்டுப் பாடிட்டு எம் பின்னாடியே வர்றான் சார்?
முதல்வர்: ஏப்பா இந்தப் பொண்ணு சொல்றது உண்மையா?
மாணவன்: ஆமாங்க சார். ஆனா நான் தப்பபா எதும் பாடல்ல.
மாணவி: இல்லீங்க சார் என்னப் பாத்து
நோக்கியா நோக்கியா
நோக்கியா நோக்கியா-னு
பாடிட்டே எம் பின்னாலே வந்தான் சார்.
முதல்வர்: எதுக்குப்பா அந்த மாதிரி பாடின?
மாணவன்: என்னோட மொபைல் ஃபோன் நோக்கியா சார். அதத் தான் நான் பாடிட்டு வராந்தவ்லே நடந்து போயிட்டிருந்தேன். அது தப்புங்களா சார்?
மாணவி: சார் மலையாளத்லே நோக்கியான்னா பாத்தயானு அர்த்தம். தமிழ்லே ’நோக்கு’ன்னா காதல் உணர்வோடு பாக்கறதுன்னு அர்த்தம். அவன் அது மாதிரி பாடுனது தப்பு இல்லீங்களா சார்?
முதல்வர்: .............???????
(காலம் சென்ற பிரபல நடிகர் ஜெய்சங்கர் நடித்த படம் ஒன்றில் வரும் “ ஆசையா கோபமா, ஆசையா கோபமா” என்ற பாட்டின் மெட்டில் அந்த மாணவன் ’நோக்கியா’வைப் பாடிக் கொண்டு சென்றான் அந்த மாணவியின் பின்னே)