தாய் தந்தையே தெய்வம்

தாய் தந்தையே தெய்வம்
தாள் பணிந்தே உய்வோம்!
சேய் தம்மையே சீராட்டி சீர் பெறவே பாராட்டி!
_
வாழை போலவே வளர்த்து
கோழைத் தனத்தை களைத்து!
கண் எனவே காத்து கல்வி மாலை கோர்த்து!
_
மண் மீதிலே மேன்மை மனந் தன்னிலே வாய்மை!
பண் பதிலே தூய்மை காப்பதிலே தாய்மை!
_
அன்புத் தேன் ஊற்றி ஆயுள் முழுவதும் தேற்றி !
வளர்ந்தவரை போற்றி வாழ்வோம் கடமையாற்றி !

எழுதியவர் : நன்றி சிறுவர் மலர் (7-Mar-14, 7:21 am)
பார்வை : 116

மேலே