மறுத்தாளோ

தென்றலே!
ஏன் உன் தேகம்
தீயாய் தகிக்கிறது?

மரங்களே!
உங்கள் நிழல்களுக்கு எப்போது
உஷ்ணத்தைக் கற்றுக் கொடுத்தீர்கள்?

மேகங்களே!
ஏன் வேகமாக ஓடுகிறீர்கள்?

பறவைகளே!
ஏன் மெதுவாகப் பறக்கிறீர்கள்?

குயில்களே!
ஏன் பாட மறுக்கிறீர்கள்?

மொட்டுக்களே!
ஏன் மலர மறுக்கிறீர்கள்?

பிறை நிலவே!
ஏன் வளர மறுக்கிறாய்?

வீசும் காற்றே!
ஏன் கனலை உமிழ்கிறாய்?

மின்னலே!
ஏன் மின்ன மறுக்கிறாய்?

விண்மீன்களே!
ஏன் மறைந்து விட்டீர்கள்?

காற்றடித்தால்
அசையும் மரங்களே!
ஏன் மௌனமானீர்கள்?

இருளே!
ஏன் விலக மறுக்கிறாய்?

என்னவள்-
புன்னகைக்க மறுத்தாளோ?

எழுதியவர் : மனோ & மனோ (8-Mar-14, 4:45 pm)
பார்வை : 123

மேலே