ஆதரவாய் தோள் கொடு போதும் - மணியன்

கனவிலும் நீயே வந்தாய்
நினைவிலே பனியாய் நின்றாய்
உணர்விலே மெல்ல உருகி
உயிரினில் வந்து கலந்தாய். . . . . .
**********

மறந்துமுனை நினைக்க மாட்டேன்
மறந்தால்தானே நினைப்பு வரும். . .
மறந்தன கண்கள் உறக்கம்
துவண்டன கால்கள் நெருக்கம். . . . .
**********

கண்ணாடி முன்னால் நின்றால்
பின்னாடி வந்து அணைத்து
பொல்லாத கவிதைகள் தூவி
அள்ளாமலெனை அள்ளும் பாவி. . . .
**********

கோலமிட வாசல் வந்தால்
தாளமிட எதிரே நிற்பாய். . .
ஆவலுடன் எட்டிப் பிடித்தால்
தாவலுடன் சிறகு விரிப்பாய். . . .
**********

ஜோடி என்று உன்னைச் சேர
மடி கொடு நானும் உறங்க
பிடி கொடா மனமும் கொண்டு
நடிப் பதென்ன உன் கண்களிரண்டு. . .
**********

பாவை நான் பக்கம் வந்து
சேவை பல செய்வேன் நன்று
தேவை என்ன நீயும் கூறு
தேடி வரின் என்னாயுளும் நூறு. . . .
**********

சூடிட ஒரு மாலையும் தொடுத்து
கூடிவா என் கைகளைப் பிடித்து
கோபுர மனையும் வேண்டாம்
கோதை எனக்குன் தோள்கொடு போதும். . . .

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (12-Mar-14, 5:56 pm)
பார்வை : 206

மேலே