உன் காதல் கவிதை நம் குழந்தை

ஒற்றை பார்வையால் மட்டும்
சொல்லிவிட கூடும்
நான் கொண்ட காதலை ..!
தொல்காப்பியம் தந்த என்
தமிழால் கூட
உன் காதல் கவிதையை
செய்ய முடியவில்லை ….
உனக்காக ஒரு
புதிய மொழி
பிறக்க வேண்டும் ....
இல்லை,இல்லை ,
உன் காதல் கவிதை
நம் குழந்தையாய்
பிறக்க வேண்டும் ….