சொல்ல முயற்ச்சிக்கிறேன் உன்னை

கவிதையின் கலங்கரை விளக்கம்
கவிகடலில் நீந்துவோரின் வழிகாட்டி
நீ முற்றுபெற்றபின்னும் தெடர்கிறாய்
காதலிலே நீ மூழ்கியே கரைந்தவன்
தத்துவத்து சிந்தயில் நீயொரு வித்தகன்
சங்க இலக்கியத்தை எளிமையாக்கி
பாமரனுக்கும் சரியாய் நீ பகிர்ந்தவன்
வார்த்தைகளை வளைத்து விளையாடி
தாய்மை மகத்துவம் உயர்த்திபிடித்து
உறவின் உன்னதம் உரக்க சொல்லி
நடப்பின் ஆளுமையை நயமாய் தந்து
தீண்டாமை தகர்த்தே தீக்கிரையாக்கி
தாவணியில் தடுக்கி விழுந்த காதலை
ரசிக்கவைத்தேதான் ருசிக்க செய்தாய்
தொட்டெழுதும் எழுத்துகள் சுவையூற
தமிழில் வார்த்தைகள் தவம்கிடந்தன
தழுவிக்கொள்ள மாட்டாயோ என்றே
என்றும் கவியுலகின் முடிசூடா மன்னன்,,

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (26-Mar-14, 2:07 pm)
பார்வை : 74

மேலே