குட்டிப்பாப்பாவின் குமறல்

இரு உடல்கள்
இருட்டு அறைக்குள்
இன்ப கலவியில்
கழிக்கப்பட்ட காம எச்சில்களில்
கருபிண்டமாய் வார்க்கப்பட்டு
பத்தாவது திங்களில்
சதை ஏறிய
சிசுவாக பிறந்தேன்.
என்னை பெண் என்றார்கள்.

என் தாய் என்னை
அவளின் பிறப்புறுப்பில்
பெற்றெடுக்கவில்லையாம்.
வலியெடுத்த இன்பத்தில்
சுகப்பிரசவத்தில் நான்
பிரசவமாகியிருந்தால்
பிரசவமாகி இருப்பாள்
என் தாய்...?!!!

வயிற்றை கிழித்த
ஆயுதங்களின் உபசரிப்பில்
அற்ப கழிவு உறுப்பாய்
என்னை வெட்டியெடுக்க
வைத்தவளுக்கு மனமுவந்து
சுரக்குமா தாய்ப்பால் ?
தாய்ப்பால் கொடுத்தால்
மேனியழகு கெடுமாம்.
தாய்மையின்றி
தாயாகி விட்டாள்
என் தாய்..!


முட்டி குத்தி
தாயின் காம்பினை
ஆசையில் கவ்வி
பால் குடிக்குமே
பசுங்கன்று..!
அந்த மிருகத்திற்கு
கிடைத்த பசும்பாலும்
எனக்கு கிடைக்காதாம்.
விஷமேற்றிய
வெள்ளைத்திராவகம்
இளஞ்சூட்டு வெந்நீரில்
கலந்தது எனக்கான
ஆரோக்கியப்பாலாக..!

புட்டிப்பாலில்
தாய்ப்பாசம் ஏறுமோ?
குட்டிப்பாப்பா நான்
பசியாற குடித்தேன்
விஷப்பாலினை...!

அன்னையின்
மார்பு காம்பினை
நோக்கியப்படியே
நோய் எதிர்ப்புசக்தியின்றி
செத்துக்கொண்டிருக்கிறேன்.

இதோ....

இதோ...
என் சிறுநீரகம்
செயல் இழக்கிறது..!
என் இதயம்
துடிப்பை நிறுத்துகிறது..!
..........
...........

நின்றுவிட்டது.
என் மூச்சு....!


- இப்படிக்கு
தாய்ப்பாலுக்கு ஏங்கிய மழலை.

-----------------------------------------------------------------------
தாய்மார்களே...!
தாய்ப்பால் கொடுங்க..!
தாய்மையை உணருங்க..!

ப்ளீஸ்.........................!!!



----------------------------------------------------------------------

-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (28-Mar-14, 9:09 pm)
பார்வை : 398

மேலே