ஒருமுறை நிஜமாய் காதலிடி

ஒருமுறை நிஜமாய் காதலிடி
போய் விடு போய் விடு பெண்ணே என் புன்னகை பறிக்காதே – நீ
போகின்ற தூரம் வரையில் என் கால்தடம் அழியாதே
யாரடி எனக்கு நீ பெண்ணே...??? உன்னை இன்று துறந்தேனே
மீண்டுமோர் உலகம் கேட்பேன் நீ அங்கு இருக்காதே
ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டு என் உயிரைக் கொண்டு போறவளே
வெட்டியப் புழுவாய் துடிக்குது மனசு உனக்கது புரியாதா...???
காதல் பந்தம் முடிந்ததென கையைக் குலுக்கிச் சென்றவளே
முடிந்திட காதல் கனவு இல்லையடி உனக்கது தெரியாதா...???
கடற்கரையோரம் நாம் நடந்த பாதை
கண்முன் தோன்றி மறையுதடி – நீ
காதில் பேசிய வார்த்தைகள் யாவும்
காற்றினில் உயரே பறக்குதடி
பூக்கடை கிழவி நல்ல ஜோடியென
வாழ்த்திய சொல் பொய் ஆனதடி
போதும் என்ற பின்பும் கொடுத்த முத்தங்கள்
முற்றும் முடிந்தே போனதடி
இனி எந்தன் வாழ்வில் நீயில்லை – என்
ஜீவன் இக்கணம் பிரியுதடி
மறுமுறை உனக்காய் பிறப்பேனே – எனை
ஒருமுறை நிஜமாய் காதலிடி

எழுதியவர் : பிரதீப் Kavipriyan (28-Mar-14, 11:13 pm)
பார்வை : 129

மேலே