அவள் திரும்புவாள்

இரண்டு நாளாய்
இரவு கழியவில்லை
காதலியிடமிருந்து ஒரு
தகவலுமில்லை

அவள் வீட்டில் என்ன நடந்ததோ என்னவோ
அவசரமென்றல்லவா சென்றாள்
நாமே அவளைக் கூப்பிடலாமா
இல்லை இன்று அவள் என்னை
அழைப்பதாகக் கூறினாளே

மனதின் அறியாக் குழப்பம்
என் உள்ளங்கை வியர்வையில்
நழுவியது அலை பேசி
ஒலித்துக்கொண்டே
வேகமாய் எடுத்தேன்

மறுமுனையில் காதலி
அழுதுகொண்டே
நம்ம விஷயம் வீட்டிலே
தெரிஞ்சுபோச்சு
எனக்கு அமெரிக்க மாப்பிள்ளை
பாத்துட்டாங்க
நாளைக்கே கல்யாணம் வேற
என்ன பண்ணுரதுன்னே புரியல
நீதான் ஏதாவது பண்ணனும்
நீ வரலன்னா நான் செத்துபோயிடுவேன்

ஆழ்ந்த யோசனையில்
என் பதில் வந்தது
அடியே மண்டு இவ்வளுவுதானா
இதுக்கா இவ்வளவு கவலை
ரொம்ப நல்லதாப் போச்சு

நீ அந்த அமெரிக்க மாப்பிள்ளையையே
கல்யாணம் பண்ணிக்கோ
எப்படியும் ரெண்டு மாசத்துல
விவாகரத்து கச்சிதமா பண்ணிடுவான்
பின்னே நான் இல்லாம
எவன் உன்ன கட்டிக்க வருவான்?

நாம் காதலுக்காக இன்னும்
இரண்டு மாதம் பொறுக்கலாமே?
அம்முனையில் அழுகை நின்றது
இருமுனையிலும் சிரி கொண்டது
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (22-Feb-11, 2:11 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 293

மேலே