நானும் காதலன்தான்

கடற்கரையில்
என்னை ஏளனமாகப் பார்த்த
அந்தக் இளமைக் காதலனுக்கு
என் கண் பதில் தந்தது
கவலைபடாதே
உனக்கும் இங்கு
என்னுடன் இடம் உண்டு
அவனருகே சென்றதும்
உரக்கக் கத்தினேன்
சுண்டல் சுண்டல்
பட்டாணி சுண்டல்
-இப்படிக்கு முதல்பக்கம்



எழுதியவர் : கௌரிசங்கர் (22-Feb-11, 2:18 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 313

மேலே