எனக்குப் பிடித்த நீ

தொண்டைக்கும் மூக்கிற்குமிடையே
ஏதோவொன்று உருண்டுகொண்டு
செல்கிறது
பெயரைச் சொல்லாமலே!
மூக்கிற்குள் மண்புழு
ஊர்ந்து செல்லும் உணர்வு!
தொண்டைக்குள் கடப்பாரை
கொண்டு குத்தியது
போன்ற வலி!

நீ என்னிடம் உனக்கு
சளி என்றாய்
மனம் படபடத்தது!
மறுநாள் காய்ச்சல் என்றாய்!
விழிகளில் கண்ணீர்
பெருகியது!
உனக்கும் எனக்கும்
அப்படியென்ன சம்பந்தம்?

உன்னைப் பிடித்த சனி
இல்லை சளி
என்னைத்தேடி வந்து
கொலைசெய்கிறது
சற்றுநேரம் இப்படியே
விட்டுவிட்டால்
இடியுடன் மழைபோல்
சளியின் காதலன்
காய்ச்சலும் வந்து விடுவானோ?

நீ எனக்கு ஒன்றும்
செய்ய வேண்டாம்!
உன்னிடம் நான் ஆசையாய்க்
கேட்கும் ஆரஞ்சுப் பழமும்
நான்கு ஐஸ்க்ரீமும்
இரண்டுகிலோ திராட்சையும்
வாங்கிக் கொண்டு
வருகிறாயா?

சளி முற்றிப் போனாலும்
பரவாயில்லை!
காய்ச்சலால் படுத்தாலும்
கவலையில்லை!
உன் கவனிப்பிற்காகவே
வராத காய்ச்சலை
வருத்தி வைத்திருக்கிறேன்!
மறவாமல் வந்துவிடு
நான் கேட்ட பொருட்களுடன்!


...................சஹானா தாஸ்!

எழுதியவர் : சஹானா தாஸ் (6-Apr-14, 7:50 pm)
Tanglish : yennaip piditha nee
பார்வை : 286

மேலே