என்னை கடந்து சென்றால்

சொல்லில்
இனியவள் எனது தித்திக்கும்
சிங்கார தாரகை.....!
சிவந்த வானம்
அழகிய மாலை பொழுதிலே
என்னை கடந்து
சென்றால்... !
நில்லாமல்
நிற்கிறேன் மனம் நகராமல்
பார்கிறேன்... !
கண்தானம்
செய்கிறேன் நினைவு
கலையாமல்
பார்கிறேன்... !
கொள்ளை
அழகு எனை கொள்ளை
அடிக்க வந்ததோ...!
கள்ள அழகு
எனை கவர்ந்து செல்ல
வந்ததோ...!
உருவமுள்ள
ஓவிய வார்த்தைகளை
சுமந்து நிற்கிறேன்
அவள்
வருகையை கண்டு...!
அர்த்தமுள்ள
காவிய பாக்களை எழுது
பார்க்கிறேன்
அவள்
அழகினை கண்டு...!
பிறை நிலவு
என்னை சுமந்த வண்ணம்
சென்றது -
ஒரு நொடியில்
எனை பரிதவிக்க
வைத்தது...!
நிற்கிறேன்
நிற்கிறேன் எனை மறந்து
நிற்கிறேன்...!
பார்க்கிறேன்
பார்க்கிறேன் எனை மறந்து
பார்க்கிறேன்...!
என் என்னவளை
எனது இனியவளை... !