புன்னகை

நீ
அணிந்துள்ள
நகைகளிலேயே
நான் விரும்பும் நகை
உன் புன்னகை !
=======================================
உன்
இந்த நகைக்கு
செய்கூலி இல்லை !
சேதாரம் உண்டு !
சேதாரம் ?
வேறென்ன
என் இதயம்தான் !
=======================================
மூடி
வைக்கப்பட்டிருக்கும்
பொக்கிஷத்தில்
ஒரு நகைமட்டும்
ஒளிர்கிறது !
=======================================
கண்களாலும்
புன்னகைக்க
உன்னால்தான்
முடியும் !
=======================================
நீ
உதடு பிரித்துப்
புன்னகைத்தால்
அது
முத்துப் புன்னகை !
நீ
உதடு பிரிக்காமல்
புன்னகைத்தால்
அது
பவளப் புன்னகை !
நீ
கன்னம் சிவந்து
புன்னகைத்தால்
அது
ரோஜாப் புன்னகை !
நீ
கண்களால் மட்டும்
புன்னகைத்தால்
அது
மௌனப்புன்னகை !
நீ
உதடு கடித்துப்
புன்னகைத்தால்
அது
தின்னும் புன்னகை !
நீ
உதடு சுழித்துப்
புன்னகைத்தால்
அது
கொல்லும் புன்னகை !
என,
ஆகமொத்தம்
உன் புன்னகை
ஆறு வகைப்படும் !
=======================================
சிரிப்பு எனும்
மழை நின்றபிறகும்
புன்னகை என்ற
தூவானம் நிற்பதில்லை
உன் முகத்தில் !
=======================================
நீயெழுதும்
புன்னகை என்ற
கவிதைக்குத்
தலைப்பு
உன் கண்கள்தானே ?
=======================================
கண்ணாடி
உன் பிம்பத்தைத்தான்
காட்டுகிறது !
உன்
புன்னகைதான்
உன்னைக்காட்டுகிறது !
=======================================
ஆகவே
தயவுசெய்து நீ
புன்னகைத்துக்கொண்டேயிரு !