தேடிய uravu

தேடிய உறவு
நாடியே வந்தது
தென்றலென உயிர்த்தந்து
திங்களாய் முகமலர்ந்து ...

உறவின் பிரிவுதனை
உணர்ந்தவர்களே அறிவார்கள்
எத்தனைகொடிய வலியொன்று
இதயத்தை உலுக்கியதென்று ....

இனிமை நிறைந்த
அருமையாய் அமைந்திட்ட
இனிய தருணங்களில்
இதயத்தை தொட்டுவிட்டு ...

மறைந்தனள் காண்
மனமெங்கும் இருள்நிரப்பி
மன்னனென எண்ணியஅவள்
மண்ணைகவ்வ செய்துவிட்டாள் ...

யார்செய்த தவறோ
யாதும் நானறியேன்
கோதையவள் தோகைவிரித்து
மனம்திறந்திட காத்திருந்தேன் ...

காத்திருந்த வேளைதனில்
கண்கள்தான் பூத்தம்மா
மனமெல்லாம் புண்களாகி
நுனநீர்தான் வந்தம்மா ...

ஏனிந்த சோதனை
என்னிடமேன் வேதனை
நான்கொண்ட சாதனை
அவளின்றி ஏதுமில்லை ...

சோதனைக் காலம்
முடித்துவிட நானறியேன்
வேதனைக் கொண்டமனதை
மாற்றிட தேடினேன் ...

தேடிய உறவு
நாடியே வந்தது
தென்றலென உயிர்த்தந்து
திங்களாய் முகமலர்ந்து ...

ந. தெய்வசிகாமணி

எழுதியவர் : ந. தெய்வசிகாமணி (19-Apr-14, 5:30 am)
பார்வை : 241

மேலே