உன் மணமாலையில் உதிரும் பூக்கள் நான் 555

உயிரே...

கண்ணுக்குள்
காதல் வைத்து...

இதயத்தில்
உன்னை வைத்தேன்...

என் கரம் பிடித்து
காத்திரு என்றாய்...

எனக்கு மணமாலை
சூடுவாய் என்று...

இன்று வரை
காத்திருந்தேன்...

நீயோ வேறொரு கரம் பிடித்து
வந்து நிற்கிறாய்...

என் முன்னே
என்னை வாழ்த்து என்று...

உன் மணமாலையில்
உதிரும் பூக்களாய்
என்னை ஆக்கினாயடி...

உன்னை வாழ்த்தி...

மணமாலை சூடிய
மணமகளே...

நீ வாழ்க.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (24-Apr-14, 9:13 pm)
பார்வை : 435

மேலே