நினைவுகளுடனேயே பயணிக்கிறது நட்பு ....


வானுயர்ந்த சோலைகளின் நிழலிலே நாம் அமர்ந்து பேசிய நினைவுகள் ....

ஓடுகின்ற அருவிகளில் காகிதத்தில் படகு விட்டு வேடிக்கை பார்த்த நினைவுகள் ....

கடல்கரை மணலில் நம் பெயரை எழுதி மகிழ்ந்த நினைவுகள் ....

மழை பொழியும் போதெல்லாம் குடை பிடித்தும் நனைந்த நினைவுகள் ....

வானமதில் பவனிவரும் மேகங்களின் நடுவே நிலாவை ரசித்த நினைவுகள் ....

கடந்து விட்ட காலங்களில் இன்னும் ஈரமாய் பசுமையாய் நினைவுகளுடனேயே பயணிக்கிறது நம்....!!!! நட்பு !!!!....

நந்தி ....

எழுதியவர் : நந்தி (1-Mar-11, 12:09 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 768

மேலே