யானைகள் சுருங்க
மன்னனை
மாலையிட்டு
தேர்வு செய்தும்
முன்னின்று படைசென்று
காவல் காத்ததும் யானை
கந்தனின் காதலை
கணேசனே உருவெடுத்து
சேர்த்து வைத்ததும் யானை
கோவில்கள் தோறும்
பக்தர்கட்கு ஆசிகூறி
வாழ்த்துகள் சொன்னதும் யானை
தன் நெற்றியில்
நாமமா பட்டையா?
மனிதர்கள் மோதிட பார்த்த யானை
வீதிகளில்
பாகன்களின் பசிபோக்க
பிச்சையெடுத்ததும் யானை
பலப்பலவாய்
பரிமளித்தயானை
ஊருக்குள் வந்திடுச்சி
பயிர் பச்சை காண
பட்டாசு வேட்டுகளில்
பாழ்படும் யானை
மனிதர்களின்றி
மிருகங்கள் வாழ்ந்த காலம்
மிருகங்களின் பொன்னுலகம்
மனிதர்கள் பெருக
மிருகங்கள் குறைய
மனிதரின் சுய உலகம்
யானைகள் சுருங்க
பாகன்கள் பெருக்கும்
காலம்.