அகன் அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

பணிச்சுமைகளுக்கு நடுவே ஸ்தம்பித்துக் கிடக்கையில் அகன் அண்ணாவின் பிறந்த தினத்தை நினைவூட்டியது பேஸ்புக். அடிக்கடி பேசிக் கொள்ளாவிட்டாலும், எப்போதும் நினைக்கும் ஒரு உறவாய் அகன் அண்ணா எப்படி ஆனார் என்று யோசித்து யோசித்து எனக்கு பதில் ஒன்றும் கிடைக்காமல் போனதுதான் மிச்சம்.

எனக்கு அகன் அண்ணாவின் புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் சமீபத்தில் மறைந்த என் தந்தையின் நினைவு வருவதையும் இங்கே நான் பகிர்ந்துதான் ஆகவேண்டும். எழுதுவது மட்டுமே வேலையாக நினைத்து எழுதிக் கொண்டிருந்த என்னை வெளியே கொண்டு வரவேண்டும் என்று என்னை விட அதிகம் விரும்புவது அகன் அண்ணாதான்...

என்னை மட்டுமல்ல என்னைப் போன்ற நிறைய படைப்பாளிக் கற்களை செதுக்கி சிற்பமாக்கி நிறையப் பேர் அறியச் செய்யும் சிற்பியும் கூட அவர்....! கற்பனைகளில் லயித்துக் கிடக்கும் ஆகச் சிறந்த படைப்பாளியான அகன் அண்ணா.....நிஜத்தில் எதார்த்தவாதி என்பதை அவரது தேனீ போன்ற சுறுசுறுப்பு பறைசாற்றும். ஒரு கலைஞன் கடலில் மூழ்கி முத்தெடுக்கும் போதே அதை எப்படி சந்தைப்படுத்துவது என்ற வித்தையையும் அறிந்திருக்க வேண்டும் என்ற விதையை எனக்குள் ஊன்றியது அகன் அண்ணாவின் எண்ண ஓட்டங்கள்தான்....


எதார்த்தங்களை விரும்புபவர்களுக்கு
எழுத்துக்களோ, விமரிசைகளோ
அல்லது...
சராசரி நிகழ்வுகளோ எப்போதும்
திருப்தியை கொடுத்து விடுமா என்ன?

சொர்க்கங்களில் வாசம் செய்பவர்களுக்கு
சந்தோசத்தை பெட்டிக்குள்...
அடைத்து கொடுத்தலாகுமா?
எல்லா விடியலையும் புதியதாய்
சுவீகரித்துக் கொண்ட ஜீவன்களுகு
சிறந்த நாளென்று தனித்து
எதைப் பகிர?..!

எல்லாம்
எழுதி முடித்த பின்னும்
எதோ ஒன்று மிச்சமாயிக்கும்
என் அடர் மெளனத்தில்
நிறைந்திருக்கிறது...
எழுத்துக்களுக்குள் ஏற்ற முடியாத
வாழ்த்தின் ஓசைகள்!

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா....!

என்றென்றும் உங்களோடு தொடர்ந்து பயணிப்பேன்.....!

ப்ரியங்களுடன்
தேவா சுப்பையா...

எழுதியவர் : தேவா சுப்பையா... (28-Apr-14, 7:24 pm)
பார்வை : 285

சிறந்த கட்டுரைகள்

மேலே