தமிழ் மொழி
குழி தோண்டாமல்
விழுந்த விதை ...
எங்கள் செவி தேடி
வந்த கதை ..
வழிவழியாய் குரல்களில்
தவழ்ந்து ,
வரிவரியாய் விரல்களில்
நெளிந்து ,
தொடர்கதையாய் இன்றுவரை
எம் மெய்சிலிர்க்க
பெய்யும் மழை...
குருதி பெருத்து
விழிபிதுக்கி
மூளைவரை
பாயும் மூத்த அருவி...
மனச்சிந்தனைகளின்
மாய மூலைகளில்
படுத்துறங்கிய கற்பனைகளின்
போர்வை விளக்கிய
அக்னி வெயில் ...
வள்ளுவனும் , கம்பனும்
வாழ்ந்த வீட்டில்,,
இன்று ஏதோ ...
கோழியும் குஞ்சுகளுமாய் ...
வடித்த நெய்யில்
படிந்த துருக்கள்..
துருக்களின் வாசனையில்
பிறந்த பூக்கள் ...
பண்பாட்டில் நெய்த சேலை
எங்கள் தமிழ் மண்ணை
போர்த்திய சோலை ...
பாரதி இட்ட விதை ..
இந்த வனமெங்கும்
மல்லிகை பூமாலை..
சோகமா? இதோ ஒரு கவிதை..
இரணமா? இதோ ஒரு காவியம்..
மகிழ்வா? இதோ ஒரு இலக்கியம்..
மரபா? இதோ ஒரு இலக்கணம்...
மோகம் ஒரு நாள் தீரும்,,
எம் தமிழ் மேகம் தீராது..
இது அவ்வை தந்த மது ..
அதில் மயக்கம் என்றும் மாறாது..
தேனீக்கள் பல கூடி
கட்டிய கூடு...
இன்று சொட்டுச்சொட்டாய்
ருசிக்கிறோம்
தமிழை...
கண்ணதாசன் சிரம் கொடுத்தார் ..
கலைஞர் கரம் கொடுத்தார்..
வைரமுத்து நிறம் கொடுத்தார் ..
நாங்கள் சுரம் பாடித்திரிகிறோம்
வானம்பாடிகளாய்...
நிமிர்ந்த நெஞ்சோடு க நிலவன்