மனதின் காயஙகள்

வானவில்லாய் வரைந்திட மனதின் ஆசைகள்..!
கானல் நீராய் கரைந்து விட்டன ..
பூங்காவாய் இருந்த வாழ்வு
போர்க்களமாக போனதென்ன ..,?
எட்டிப்பிடிக்க
எத்தேனித்தவை
தட்டிப்பறிந்து பொய் விட்டன ...
பார்க்கும் காட்சியெல்லாம்
கடந்து வந்த பாதையின்
முட்களை மட்டுமே காட்டுகின்றன ..,
என்னை பார்த்து வழிநடந்தோர்
என்னையே மிதித்து மேலே போய் விட்டனர் ...
நானோ இன்னும் முகவரி
தேடி காலத்தை கேட்கிறேன் ...?
தோல்வி தந்த வலி இன்னும்
நெல்லிக்கனியாய்,,
சுவைக்கத்தான் செய்கிறது ....

எழுதியவர் : நஸ்ரி நேஹான் (30-Apr-14, 10:52 pm)
சேர்த்தது : நஸ்ரி நேஹான்
பார்வை : 74

மேலே