எப்போது வருவாய்

நாளும் ஒரு சொல்
நால்வர் சொல்லும் சொல்
நம்பிக்கை இல்லா சொல்
நானும் கேட்கிறேன் ..

திருப்பி கேட்டு
தீராவலி ஏற்காமல்
தீர்க்கமான முடிவாய்
திரும்பி செல்கிறேன்..

ஞாபக முடிச்சு
ஞாணின் சிக்கெடுத்து
ஞாலத்தில் உலாவர
ஞானம் கேட்கிறேன் ...

மீண்டுவரும் வேளையில்
மீளமுடியாமல் நான்நிற்க
மீளியாய் வந்து
மீட்டு சென்றாய்...

சாகரம் தாண்டி
சக்கரவாகமாய் நாமிருக்க
சலிப்பின்றி ஈட்டி
சாதலில் காத்தாய்..

உக்கழுத்துமணி சிதற
உருகி நாமிருக்க
உகந்தவர் வரவை
உவகையோடு நோக்கியபடி ...

- வைஷ்ணவ தேவி

எழுதியவர் : வைஷ்ணவ தேவி (23-May-14, 6:22 pm)
Tanglish : eppothu varuvaay
பார்வை : 858

மேலே