ஏழ்மை வலி கண்டவன்

இந்த உலகம் என்னை
நிந்தித்தாலும்........
இது என் உலகம் என்றே
சிந்திக்கிறேன் .......

ஏதுமற்று போகும் முன்
ஏதேனும் ஆற்றிட நினைக்கிறேன்......
என் வழி நடந்துப்பார்
முட்கள் பாதைகளில் அல்ல
முட்களே பாதைகளாய்
காண்பாய்

நீ முட்கள் மேல் மலர் தூவி
மறைக்க எண்ணுகிறாய்.......
நான் என்னால் முடிந்தவரை அதை
அகற்ற பார்கிறேன்........

எத்தனை முறை என்
கால்கள் கிழிந்தாலும் சரி
என் இரத்தக்கரை படிந்த
இடம் உன் பாதங்களை வை

அங்கிருந்த முட்களை அகற்றி
இருப்பேன், நீ வலிக்காமல்
நடக்க.........

ஏழ்மை அறிந்தவன் நான்

எழுதியவர் : கவியரசன் (27-May-14, 3:46 pm)
பார்வை : 191

மேலே