காதல் - நாகூர் கவி

எப்பொழுதும் எப்போதும்
ஆளுங்கட்சி...!

எதிர்ப்பவர்களுக்கு மட்டும்
எதிர்க்கட்சி....!

இதயத் தொகுதியின்
நிரந்தர வேட்பாளன்...!

தேவதைகள் தங்கும்
கூடாரம்....!

அஹிம்சையான
இம்சை....!

விழிகளின் தீப்பொறிக்கு
இதயங்களை எரிக்கும்...!

ஒரு இதயத்தால்
சிறைப்பிடிக்கப்படும்...!

இரு இதயங்களால்
விடுதலைப்பெறும்...!

விழிகளில் மொட்டுவிட்டு
இதயத்தில் பூக்கும்...!

வாலிப நெஞ்சங்கள்
தத்தெடுக்கும் பிள்ளை...!

தண்ணீராலும்
அணைக்கமுடியாத தீ...!

கண்ணிற்கு தெரியாத
அழகிய கவிதை...!

விழிகளின் பேச்சுக்கு
இதயங்கள் செவிகொடுக்கும்...!

இதயவலி வந்தபிறகும்
மருத்துவரை அணுகாது...!

விழிகளை வைத்து
இதயங்களை கொள்ளையடிப்பது...!

விழிகளின் தூண்டிலில்
இதயங்களை சிக்கவைப்பது...!

உலகம் அறிந்த
ஊமைப்பிள்ளை...!

விழிகளால் சலவைசெய்து
இதயத்தால் அணிவது...!

இதயத்தில் ஊடுருவும்
தீவிரவாதி...!

ஒற்றையடி
பாதை....!

இதயத்தின்
காற்றழுத்த தாழ்வுநிலை...!

இதயத்தை இலக்காய்வைத்து
மையம்கொள்ளும் ஒரே புயல்...!

கண்ணீர் கடலின்
ஊற்று...!

வெட்டிப் பயலையும்
வெற்றிப்புயலாய் மாற்றும் ஆசான்...!

முத்த கவலைகளை சுமக்கும்
மொத்த ஏடு...!

காதலியை கடவுளாய் நினைத்து
இதயம் இழுக்கும் தேர்...!

இருள்சூழ்ந்த இதயத்திலும்
ஒளிவிளக்கைப்போல் மின்னும்...!

நேசிக்கும்போது கற்கண்டு
விலகும்போது அணுகுண்டு...!

அழகிய ஹைக்கூ
உன்னை விரைவில் ஆக்கும் சைக்கூ....!

வாலிப கடலையின்
விதை...!

திடமான உன்னையும் என்னையும்
தடயமில்லாமல் ஆக்கும்...!

விதையில்லாமல்
வளரும் இதயச்செடி....!

இதயக்கரையை கடக்காமல்
அங்கேயே நிற்கும் புயல்...!

அடியே படாமல்
அடியேவால் உண்டாகும் வலி...!

வாழவும் விடாது
சாகவும் விடாது...!

எழுதியவர் : நாகூர் கவி (7-Jun-14, 12:30 am)
பார்வை : 857

மேலே