காதல்

செல்லும் பாதையை பார்த்து
பார்த்து நடந்து கொண்டிருந்தேன்
ஒரே பள்ளமும்,மேடுமாக
இருந்தது..!!!

நான் என்று என்னவளின் காதல்
வலையில் விழுந்தேனோ!!

அன்று முதல் ஆவலுடன்
என் பாதையை ரசித்து
நடக்கத் தொடங்கி விட்டேன் !!!

ஏனெனில் பாதை முழுவதும்
என் இதயத்தில் வடித்த என்னவளின்
அழகு முகம் தெரிவதினால் தான்..!!!

எழுதியவர் : சோ. வடிவேல் (7-Jun-14, 2:05 am)
Tanglish : kaadhal
பார்வை : 230

மேலே