நீ யார்

மனதினுள் சோககீதம் பாடி
கற்பனைகளில் துள்ளித்திரிந்த
இதய பாதங்களில் ஆணி ஏற்றிய
நீ யார்...........?
கவி எழுதும் கரங்களுக்கு விளங்காத
கைவிலங்கு இட்ட நீ யார்........?

உள்ளுக்குள் உறுத்தியபடி
உறவாடிக் கொண்டிருக்கும்
உன் சத்தங்களின் விளக்கம்
அறியாது தவிக்கிறேன்
நீ யார்............?

வாழ்வில் ஏற்பட்ட சலிப்பா...........?
சிறு சிறு வெற்றிகளின் களிப்பா.........?
சாதிக்கும் எண்ணங்களின் தொகுப்பா........,?
சாதிக்கவில்லையே என்ற பரிதவிப்பா........?
யார் நீ...........?

எல்லாம் இருந்தும்
ஏதும் அற்றவன் போன்ற
மாயத் தோற்றமிடும்
உள் ஊறும் இசையே
உன் கீதங்கங்களின் அர்த்தம் என்ன.............?

என்றோ துலைந்து போனவளின்
இமை அளவு நினைவா..............?
கண்ணே மணியே எனும்
ஈன்றவர் வைத்த கனவா...............?
எதிர்காலம் பற்றிய நினைவா..........?
உடல்நிலை குறைவா...........?
யார் நீ..............?

சலசலப்புகளை கூட்டியபடியும்
கலகலப்புகளை வாட்டியபடியும்
இருக்கும் நீ யார்........?

பற்றற்று வாழ சொல்கிறாயா..............?
ஏதேனும் ஒன்றை பற்றிக்கொள்
என சொல்கிறாயா.............?
விடைகாண இயலாதவனுக்குள்
அடிக்கடி இடம்காண்கிறாயே
யார் நீ...............?

நிச்சயம் விடை காணாது
ஓயமாட்டேன்
என் பிறப்பின் அர்த்தம்
உணர்த்தும் புதிர்
நீயாகவும் இருக்கலாம்....................

எழுதியவர் : கவியரசன் (7-Jun-14, 5:01 pm)
Tanglish : nee yaar
பார்வை : 526

மேலே