நினைவாய் நெஞ்சில் நீ

அன்பே உன்னுடனே நான் இருக்கவேண்டும் என்று உன் நிழலாகவே நான் தொடர்ந்து வருவேன் ...
காயங்கள் நீ தந்தாலும் காதலை மட்டுமே நான் தருவேன் ...
என் உயிரூட்டம் நின்றாலும் என் உயிர் -அதை உணகளிப்பேன் ....
நான் உணர்வற்றுப்போனாலும் என் உள்ளம் -அதை
உன்னிடம் கொடுப்பேன் ...
என் உடைந்து போன இதயத்தை
ஒன்றாய் சேர்த்து -உன் பெயரிடுவேன் ..
உன் உள்ளம் ரணப்படும் போது -என்
காதலால் அதில் மருந்திடுவேன் ...
இந்த உலகமே இருண்ட போதிலும் என் உயிருக்கு நெருப்பூட்டி ஒளி கொடுப்பேன் ...
இமை போலே நானும் பிரியாமல் விழி போலே உன்னை நான் காத்திருப்பேன் ..
நீ இன்றி நான் வாழும் நிலை வந்தால் நினைவற்று போகும் வரம் கேட்பேன் ..